Published : 16 Aug 2015 09:36 AM
Last Updated : 16 Aug 2015 09:36 AM
சென்னையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங் களில் 69-வது சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது.
திமுக
தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரை சாமி தேசியக் கொடியை ஏற்றிவைத் தார். திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன், மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன் (சென்னை தெற்கு) பி.கே. சேகர்பாபு (சென் னை கிழக்கு) சட்டத் துறை செயலாளர் இரா.கிரிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேமுதிக
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத் தில் நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்தவிழாவில் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகளும் இதில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேசியக் கொடியேற்றி, காஙகிரஸ் சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், மகளிரணி மாநிலத் தலைவர் எஸ்.விஜயதாரணி, மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
தமாகா
சென்னை ஆழ்வார் பேட்டை யில் உள்ள தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். தமாகா மூத்த துணைத் தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
பாஜக
தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் இல.கணேசன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு, மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தேசியக் கொடியேற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு தேசியக் கொடியேற்றி வைத்து பேசினார். வட சென்னை மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
சமத்துவ மக்கள் கட்சி
தியாகராய நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. தேசியக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
சென்னை மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தேசியக் கொடியேற்றினார். இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT