Published : 11 Dec 2019 10:51 AM
Last Updated : 11 Dec 2019 10:51 AM

குழந்தையை கொன்று தாய் தற்கொலை: உயிரிழப்பில் சந்தேகம் என தாய் புகார்

அரக்கோணத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘அரக்கோணம் அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவரது மனைவி ரம்யா (22). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமண மானது. ஒன்றரை வயதில் அஸ்வதி என்ற மகள் இருந்தார். ரம்யாவிடம் வரதட்சணை கேட்டு சதீஷின் குடும்பத்தினர் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன வேதனை அடைந்த ரம்யா, தனது மகள் அஸ்வதியுடன் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலில் குழந் தையை தூக்கிட்டு கொலை செய்து விட்டு, பின்னர் ரம்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுதொடர்பான தகவலின் பேரில் அரக்கோணம் நகர காவல் துறையினர் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், ரம்யாவின் தாய் கவிதா அளித்துள்ள புகாரில் தனது மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், திரும ணமான 3 ஆண்டுகளில் ரம்யா உயிரிழந்ததால் அரக்கோணம் வருவாய் கோட்ட சார் ஆட்சியர் (பொறுப்பு) இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார். இந்த தற்கொலை தொடர்பாக அரக்கோணம் நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x