பிஎஸ்எல்வியின் 50-வது ராக்கெட் 10 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்ட்டவுன் தொடங்கியது

பிஎஸ்எல்வியின் 50-வது ராக்கெட் 10 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்ட்டவுன் தொடங்கியது
Updated on
1 min read

ரேடார் செயற்கைக் கோளான ‘ரிசாட்-2பிஆர்1’ பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் இன்று மதியம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 22.45 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறு வனம், (இஸ்ரோ) ரிசாட்-2பிஆர்1 என்ற அதிநவீன ரேடார் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச.11) மதியம் 3.25 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ராக்கெட் ஏவுதலுக்கான 22.45 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானி கள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.

ரிசாட் செயற்கைக்கோள் 628 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது புவியில் இருந்து 576 கி.மீட்டர் உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. ரிசாட் முழுவதும் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு பயன்படும். மேலும், விவசாயம், பேரிடர் மேலாண்மை போன்ற பணிகளுக்கு உதவியாக இருக் கும். இதனுடன் வெளிநாடு களுக்குச் சொந்தமான 9 சிறிய வகை செயற்கைக் கோள்களும் வணிக ரீதியாக ஏவப்பட உள்ளன. இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட் டுகளின் 50-வது திட்டமாகும். அதனால் இதன் வெற்றியை பெரிதும் எதிர்நோக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in