Published : 10 Dec 2019 10:03 AM
Last Updated : 10 Dec 2019 10:03 AM

ரஜினிகாந்த் கட்சித் தொடங்கும் வரை அவர் குறித்து பேசுவது சரியாக இருக்காது: பாஜக தலைவர் முரளிதர ராவ்

உள்ளாட்சி தேர்தல்களை அ.இ.அ.தி.மு.க கூட்டணியுடனோ அல்லது தனியாகவோ பாஜக சந்திக்கும் என்று பாஜக தமிழக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.

ரஜினி-கமல் அரசியல் கூட்டணிக்கான சாத்தியங்கள் பற்றி அவரிடம் கேட்ட போது, “ரஜினிகாந்த் பற்றியோ அவரது எதிர்கால நடவடிக்கைகள் பற்றியோ இன்றைய நிலையிலும் கூட பேசுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். அவர் முதலில் கட்சி தொடங்க வேண்டும்.

அதன் பிறகு அவரது கொள்கைகள், திட்டங்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் பற்றி பேசுவதற்கானத் தேவை இருப்பதாக நான் கருதுகிறேன்.

இப்போது எதுவும் நடக்கவில்லை, எனவே யூகத்தின் அடிப்படையில் அவரைப் பற்றி கருத்துக் கூறுவது முறையாக இருக்காது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x