விருதுநகரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு

விருதுநகரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார்.

காரியாபட்டி அருகே உள்ள அரசகுளத்தைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மகள் சஞ்சனா (4). கடந்த 10 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த 2-ம் தேதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, சிறுமி சஞ்சனாவுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வந்த சிறுமி சஞ்சனா இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அரசகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in