அரசுக்கு நன்றி தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ

அரசுக்கு நன்றி தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ
Updated on
1 min read

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மழை வெள்ளத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றியதற்காக தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர்) நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பொன்னுப்பாண்டி பேசும்போது, ‘‘பெருமழை, வெள்ளத்தால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற 4 ஆயிரம் பக்தர்கள் மலையில் சிக்கிக்கொண்டனர்.

மாவட்ட நிர்வாகம் அவர்களை பாதுகாப்பாக மீட்டது பாராட்டுக்குரியது. அதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் நன்றி’’ என்றார்.

இதைக் கேட்டதும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in