Published : 07 Dec 2019 07:09 PM
Last Updated : 07 Dec 2019 07:09 PM

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு:  7 ஆயிரம் கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வந்த நிலையில், மேட்டூர் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நேற்றுக் காலை நீர் வரத்து 7,800 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் கிழக்க, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடியாக நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 750 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 120 அடியாக நீடித்து வரும் நிலையில், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x