Published : 03 Dec 2019 09:41 AM
Last Updated : 03 Dec 2019 09:41 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 நேர்முகத் தேர்வில் முதல் 8 இடங்களை பிடித்த சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மொத்தம் 25 துறைகளில் 1338 பணியிடங் களுக்காக குரூப்-2 தேர்வை நடத்தியது. முதல்நிலை தேர்வை 6.26 லட்சம் பேர் எழுதினர். அதில் வெற்றி பெற்ற 14,797 பேர் முதன்மை தேர்வை எழுதினர்.

இவர்களில் 2667 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மூலச்சான்று சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த நவ. 6 முதல் 30-ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

நேர்முகத் தேர்வு முடிவுகள் கடந்த நவ.30-ம் தேதி வெளி யிடப்பட்டது. இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 480 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக அளவிலான குரூப்-2 தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவ, மாணவிகள் 8 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களில் 6 பேர் பெண்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற திருப்பூரைச் சேர்ந்த மாணவி டி.வி.சுபாஷினி முதலிடம் பெற்றுள்ளார். அதேபோல பி.வாவண்யா 3-ம் இடமும், கே.எஸ்.கனகதுர்கா, நிவேதா லட்சுமி, சகாய ஜெர்வின் சிங், ஐஸ்வர்யா, ஜி.மகேஸ்வரி, ராஜ்குமார் ஆகியோர் முறையே 5, 6, 7, 8, 9, 10-ம் இடங்களையும் பெற்றுள்ளனர்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குரூப்-1, குரூப்-2 பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் 7667766266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x