Published : 01 Aug 2015 11:53 AM
Last Updated : 01 Aug 2015 11:53 AM

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

இதுகுறித்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்த தகவல்:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜி.எம்.ஹரிகிருஷ்ணா (59). கடந்த 28-ம் தேதி பங்காரு பாளையத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். அவர் சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.

அதன்படி, நேற்று காலை 6 மணி முதல் உடல் உறுப்புகள் அகற்றும் பணியில் சிறப்பு மருத்துவ குழுவினர் ஈடுபட்டனர்.

ஹரிகிருஷ்ணாவின் இதயம் சென்னை போர்ட்டீஸ் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை குளோபல், மற்றொரு சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டன. உடல் உறுப்புகளுடன் மருத்துவ குழுவினர் உடன் சென்றனர்.

ஹரிகிருஷ்ணாவின் கல்லீரல் மற்றும் இரண்டு கண்கள் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டன. உடல் உறுப்புகளை பாதுகாப்புடன் சென்னைக்கு எடுத்துச் செல்ல வேலூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை போலீஸார் உதவியாக இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x