Published : 30 Nov 2019 06:40 PM
Last Updated : 30 Nov 2019 06:40 PM
தமிழகத்தில் புதிய உள்துறைச் செயலர் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:
மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பழையப்பொறுப்புடன்:
1. நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் மாற்றப்பட்டு உள்துறை துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் எம்.வள்ளலார் மாற்றப்பட்டு பால் பண்ணை உற்பத்தி ஆணையர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி மாற்றப்பட்டு அரசு கஜானா மற்றும் கணக்கு துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. அரசு மற்றும் கணக்குத்துறை ஆணையர் ஜவஹர் மாற்றப்பட்டு போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. உத்தமபாளையம் உதவி ஆட்சியர் வைத்தியநாதன் மாற்றப்பட்டு பொள்ளாச்சி உதவி ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
6. பால் பண்ணை உற்பத்தி ஆணையர் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மேலாண் இயக்குனர் காமராஜ் மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. மாவட்ட வருவாய் சிறப்பு அலுவலர், தமிழ்நாடு சாலை திட்டப்பணி - 2 ஷாந்தி மாற்றப்பட்டு தமிழ்நாடு காதி கிராம தொழில் வளர்ச்சித் துறை தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் கிரேஸ் நான்ரண்டி கி பச்ஷுஹா சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (கல்வி) நியமிக்கப்பட்டுள்ளார்.
9. வேளாண் துறை கூடுதல் இயக்குனர் விஜயராணி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
10. தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் மேலாண் இயக்குனர் கஜலட்சுமி மாற்றப்பட்டு சிறுதொழில் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தலைமைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT