Published : 30 Nov 2019 11:10 AM
Last Updated : 30 Nov 2019 11:10 AM

பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடலை வழங்க குவியும் சிபாரிசுகள்: மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ எச்சரிக்கை 

மதுரை அரசு மருத்துவமனையில் தற்கொலை உள்ளிட்ட சந்தேக மரணங்களில் பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடலை பெறுவதற்கு அதிக அளவு சிபாரிசுகள் குவிவதால், எவ்வித சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நோட்டீஸ் ஓட்டி ‘டீன்’ எச்சரித் துள்ளார்.

பொதுவாக ஒருவர் தற்கொலை செய்து கொண் டாலோ, விபத்தில் இறந்தாலோ அல்லது சந்தேகப்படும் படி இறந்தாலோ அவர்கள் குடும்பத்தினர் முதலில் போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள்.

அதுபோல், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து இறந்தாலும் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்த பிறகே உறவினர்களிடம் ஒப்படைப் பார்கள். இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் தடய அறிவியல் (Forensic Medicine)என்ற சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தனியாக செயல்படுகிறது.

இந்த துறையைசேர்ந்த ஒரு உதவி பேராசிரியர் தலை மையில் 2 பட்டமேற்படிப்பு மாணவர்கள், 2 மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழு, தினமும் சந்தேக மரணங் களை பிரேதப் பரிசோதனை செய்கின்றனர். பிற மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அங்குள்ள மருத்துவர்களே பிரேதப் பரிசோதனை செய்கின் றனர். ஒரு உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு குறைந்தபட்சம் ஒருமணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது.

நிறைய உடல்கள் வந்தால் பிரேதப் பரிசோதனை செய்தற்கு தாமதமாகும். அதனால், சிலர் தெரிந்த மருத்துவர்கள், போலீஸார் மற்றும் டீனுக்கு சிபாரிசு செய்து உடனடியாக உடல்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய் கின்றனர்.

இந்நிலையில், சமீப கால மாக தற்கொலை சம்பவங் களில் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யா மலேயே வாங்குவதற்கு ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சி யினர் மற்றும் உயர் அதிகாரிகள் மூலம் மருத்துவமனை நிர்வாகத்துக்கு நெருக்கடி தரப்படுவதாகவும், அதற்காக டீனுக்கு சிபாரிசுகள் அதிகம் வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனால், மருத்துவமனை நிர்வாகம், ‘டீன்’ அலுவலகம் அருகே ‘மருத்துவமும் சட்டமும் சார்ந்த வழக்குகளில் (medico Legal Case) சம்பந் தப்பட்ட உடல்கள் கண்டிப் பாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். எவ்வித சிபாரிசும் ஏற்றுக்கொள் ளப்படாது என்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ மனை ஊழியர்கள் கூறுகை யில், சிலர் பிரேதப் பரிசோதனை செய்யாமல் இருக்க மருத்துவமனை நிர்வா கத்தையும், போலீஸாரையும் அரசியல்வாதிகள் ஆதரவுடன் சரிக்கட்டப் பார்க்கின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை டீனுக்கு அதிக அளவில் சிபாரிசுகள் வரும். இதுபோன்ற நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x