Published : 28 Nov 2019 09:02 PM
Last Updated : 28 Nov 2019 09:02 PM

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக திடீர் வழக்கு

தொகுதி மறுவரையறைப் பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

ஏற்கெனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை. ஆகவே தொகுதி மறுவரையறைப் பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது.

ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது. உள்ளாட்சித் தேர்தல் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை விரைவில் நடக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x