Published : 23 Nov 2019 10:00 AM
Last Updated : 23 Nov 2019 10:00 AM
திருச்சி
பதிவு பெற்ற கட்சி என கிடைப்பதில் தாமதமானால் சுயேச்சையாக போட்டியிட தயாராக உள்ளோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
அமமுக சார்பில் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்றுநடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது:அமமுகவை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு கிடைத்துவிட்டால் பதிவு பெற்ற கட்சியாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் சின்னம் பெற்று போட்டியிடுவோம். ஒருவேளை பதிவு கிடைப்பது தள்ளிப்போனால் சுயேச்சையாக போட்டியிட தயாராக உள்ளோம்.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில்தான் கட்சியைப் பதிவு செய்யும்வேலையில் ஈடுபட்டிருந்தோம். எனவேதான், இடைத்தேர்தலில்கூட போட்டியிடவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வந்தால் போட்டியிட தயாராகி வருகிறோம்.உள்ளாட்சி அமைப்புத் தேர்தலை நடத்த ஆளுங்கட்சி தயாராக இல்லை என்பதே உண்மை.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட யாரையும் நாங்கள் சவாலாக நினைக்கவில்லை. எங்கள் எதிரியான திமுகவையும், துரோகியான பழனிசாமியையும் அரசியலில் தோற்கடித்து ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதுதான் எங்கள் எண்ணம். அதற்காக முழு மூச்சாக செயல்பட்டு வருகிறோம்.
வரும் தேர்தலில் மாற்றம் வரும்என்பதைத்தான் அதிசயம் நடக்கும் என்று நண்பர் ரஜினிகாந்த் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் அதிமுக,திமுக இல்லாத ஆட்சி அமைவதுதான் வரும் பொதுத்தேர்தலில் நடைபெறப்போகும் அதிசயம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT