Published : 22 Nov 2019 08:04 AM
Last Updated : 22 Nov 2019 08:04 AM
மதுரை
தமிழகத்தில் மேயர், நகராட்சி, பேரூ ராட்சி தலைவர் பதவிகளுக்கு மறை முகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நடை முறையை மாற்றி, விரைவில் நடை பெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் (கவுன்சிலர்களால் தேர்வு செய்வது) நடத்துவது தொடர்பாக தமிழக அரசு நேற்று முன்தினம் அவசர சட்டம் பிறப்பித்தது.
மறைமுகத் தேர்தல் முறைக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் வழக்கறிஞர் கே.நீல மேகம் நேற்று ஆஜராகி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்தால் விசாரித்து உரிய உத் தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மறைமுகத் தேர் தல் முறையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மாலை மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழ கத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சி களுக்கு மேயர், தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப் பட்டனர். இப்போது இப்பதவி களுக்கு மறைமுகத் தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மறைமுகத் தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இயற்கை நியதிக்கு எதிரானது. அரசு சுயலாப நோக்கத் துடன் மறைமுகத் தேர்தலை அமல்படுத்தியுள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதில் உள் நோக்கம் உள்ளது. இந்தத் தேர் தல் முறை பெரியளவில் குதிரை பேரம் நடைபெற வழி வகுக்கும்.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப் படும் போது இணக்கமான சூழல் ஏற்படும். கவுன்சிலர்கள் சேர்ந்து தேர்வு செய்யும் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் களுக்கும் மக்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. அவர்களால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது.
கடந்த திமுக ஆட்சியில் இப் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மறைமுகத் தேர்தல் முறை பல்வேறு முறை கேடுகளுக்கு வாய்ப்பளிக்கும் என்று கூறி நேரடித் தேர்தல் முறையை அமல்படுத்தினார். தற் போது ஜெயலலிதாவை தலைவ ராக ஏற்று ஆட்சி செய்வோர் நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து மறைமுகத் தேர்தல் முறையைக் கொண்டு வந்துள்ளனர்.
சரியான நோக்கத்துடன் மறை முகத் தேர்தல் முறையை அமல் படுத்தவில்லை. அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், அந்த முடிவு மக்களுக்கு விரோதமாக இருந் தால் அதில் தலையிடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள் ளது.
அதன் அடிப்படையில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட் டத்தை செல்லாது என அறிவித்து நேரடி தேர்தல் மூலம் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் களைத் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT