Published : 21 Nov 2019 09:39 AM
Last Updated : 21 Nov 2019 09:39 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,510 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,143 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 900 கனஅடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x