Published : 20 Nov 2019 10:02 AM
Last Updated : 20 Nov 2019 10:02 AM

ரூ.435 கோடி வரி ஏய்ப்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு கொசுவலை நிறுவன உரிமையாளருக்கு சம்மன்

ரூ.435 கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக திருச்சி வருமான வரித் துறை அலுவலகத்தில் நாளை (நவ.21) நடைபெறவுள்ள விசாரணைக்கு ஆஜராகுமாறு கரூர் கொசுவலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கரூர் ராம் நகரைச் சேர்ந்தவர் சிவசாமி. இவர் கரூர் வெண்ணெய்மலையில் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற பெயரில் கொசுவலை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்துக்கு சொந்த மான தொழிற்சாலைகள் கரூர்அருகே உள்ள ஆத்தூர் சிப்காட்மற்றும் கோவை சாலையில்தண்ணீர்ப்பந்தல் ஆகிய இடங்களில் உள்ளன. இந்நிறுவனத்துக்கான ஜாப் வொர்க் பணிபல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த 15-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் வருமான வரித் துறையினர் இந்நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய 20 இடங்களில் நடத்திய சோதனையில், சிவசாமியின் வீட்டில் இருந்து ரூ.32.60 கோடி ரொக்கம், 10 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும், போலி செலவுக் கணக்கு ஆவணங்கள் மூலம் ரூ.435 கோடி மதிப்புக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.

இதுதொடர்பாக, திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் நாளை (நவ. 21) நடைபெறவுள்ள விசாரணைக்கு ஆஜராகுமாறு நிறுவன உரிமையாளர் சிவசாமிக்கு வருமான வரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x