Published : 20 Nov 2019 09:53 AM
Last Updated : 20 Nov 2019 09:53 AM
கார்ட்டோசாட்-3 உள்ளிட்ட 14 செயற்கைக்கோள்கள் வரும் 25-ம் தேதி பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு பணிகளுக்கு அதிநவீனகார்ட்டோசாட்-3 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து வரும் 25-ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
3டி கேமராக்கள்புவியில் இருந்து 509 கிமீ உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் கார்டோசாட் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதனுடன் அமெரிக்காவின் என்எஸ்டிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் வணிகரீதியாக விண்ணில் ஏவப்படுகின்றன. கார்ட்டோசாட் முழுவதும் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு பயன்படும். இதிலுள்ள 3டி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகள் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவையாகும்.
பாதுகாப்பு பலப்படும்இதன்மூலம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல், எதிரிகளின் ராணுவ நிலைகள் மற்றும் பதுங்கு குழிகளைக் கண்காணிக்க முடியும். இதையடுத்து டிசம்பர் மாதம் ரிசாட்-2பிஆர்1, ரிசாட்-2பிஆர்2 ஆகிய செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன.
இந்தப் பணிகள் வெற்றி அடைந்தால் நாட்டின் ராணுவ பாதுகாப்பு மேலும் பலம் அடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT