Published : 19 Nov 2019 01:58 PM
Last Updated : 19 Nov 2019 01:58 PM
மதுரை மாநகராட்சி மேயர் சீட்’ டை குறி வைத்து தேமுதிக தனது கூட்டணித் தலைமையான அதிமுகவிடம் காய்நகர்த்தி வருவதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தல் தேதி விரைவில் அறிவிக் கப்பட உள்ளது. இதனால், தேர்த லைச் சந்திக்க முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுக, திமுக, பாஜக, காங் கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்னதாகவே தங் களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய சீட்கள் குறித்து கூட்டணிக் கட்சிகள் ஆலோசனையில் ஈடு பட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிக்க வேண்டும் என தீவிரம் காட்டி வருகின்றன.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக உள் ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை நட த்தி வருகிறது. கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அதிமுகவிடம் பேச்சு வார்த்தை நடத்த குழு ஒன் றையும் அமைத்துள்ளது.
அதேநேரத்தில் தேமுதிக தங்கள் கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெறத் தொடங்கி யுள்ளது. மதுரை நகர் தெற்கு, வடக்கு, புறநகர் வடக்கு, தெற்கு என பிரித்து மாவட்டச் செயலர் அலுவலகங்களில் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. மதுரையில் நவ., 17-ல் தொடங்கி 25-ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என அக்கட்சித் தலைமை அறிவித் துள்ளது.
தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சி மேயர் சீட்களில் மதுரையை தேமுதிகவுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளது என கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
இது குறித்து தேமுதிக தொழிற்சங்கப் பொருளாளர் முஜூபுர் ரகுமான் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலர் அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் பெறுவதைத் தொடர்ந்து மதுரையிலும் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறோம். நிர்வாகிகள், தொண் டர்கள் ஆர்வமுடன் மனுக்கள் கொடுக் கின்றனர். சிலர் மேயர் பதவிக்கும் விருப்ப மனு அளித்துள்ளனர்.
தமிழக அளவில் 30 சதவீத உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடங்களை எங்களுக்கு ஒதுக்க அதிமுகவிடம் கேட்க தலைமை முடிவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை மேயர் சீட்டை பெற வேண்டும் என எங்கள் தலைமைக்கு ஏற்கெனவே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி உள்ளோம். மேயர் சீட் பெற்றால் வெற்றிவாய்ப்புகள் குறித்தும் தலைமைக்குத் தெரிவித்து விட்டோம். எனவே, மதுரை மேயர் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்று கூறினார்.
- என்.சன்னாசி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT