Published : 18 Nov 2019 01:31 PM
Last Updated : 18 Nov 2019 01:31 PM

வெப்பச்சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை லேசான மழைப் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்:

“வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை லேசான மழைப் பெய்யும்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழையின் அளவு தரங்கம்பாடி -3 செ.மீ. பாபநாசம் -2 செ.மீ., சிவகிரி -2. செ.மீ., தென்காசி -2 செ.மீ. ஆகும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 34°செல்ஷியஸ் இருக்கும் எனவும் குறைந்தபட்சமாக 26°செல்ஷியஸ் இருக்கும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x