Published : 15 Nov 2019 05:31 PM
Last Updated : 15 Nov 2019 05:31 PM
காரைக்குடி
"ரஜினி அரசியலுக்கு வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்" என முன்னாள் எம்பி, சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் மகளின் திருமணம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று (நவ.15) நடைபெற்றது.
திருமண விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்பி, சி.பி.ராதாகிருஷ்ணன், "நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை பாஜக வரவேற்கிறது. அவர் மீது காவி சாயம் பூச பாஜக விரும்பவில்லை. ரஜினி அரசியலுக்கு வரும் தருணத்தில் கூட்டணி குறித்து பாஜக தனது நிலைப்பாட்டை எடுக்கும்.
ஆன்மிக அரசியலும், அறம் சார்ந்த அரசியலும் தமிழகத்திற்கு தேவை.
சபரிமலை தீர்ப்பு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது வரவேற்கதக்கது" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT