Published : 15 Nov 2019 12:45 PM
Last Updated : 15 Nov 2019 12:45 PM
மதுரை
மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று (நவ.15) மதுரையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி தலைமையிலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் எஸ்.பழனிசாமியின் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மதுரை ஆட்சியர் டிஜிவினய், தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ், விருதுநகர் ஆட்சியர் சிவஞானம், திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை டிசம்பரில் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது. இதில் எந்தெந்த தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று (நவ.15) மதுரையில் நடைபெற்றது.
முன்னதாக நேற்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT