Published : 15 Nov 2019 10:02 AM
Last Updated : 15 Nov 2019 10:02 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,000 கனஅடியானது

சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு விநாடிக்கு 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்புப் பகுதி களில் பெய்த வட கிழக்குப் பருவ மழையால் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக, கடந்த 11-ம் தேதி இரவு நிரம்பியது. இதனிடையே, மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் விநாடிக்கு 16,678 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,000 கனஅடியாக குறைந்தது.

இதனால், டெல்டா பாசனத்துக் கான நீர்திறப்பு விநாடிக்கு 15,000 கனஅடியில் இருந்து, நேற்று காலை முதல் 5,000 கனஅடி யாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

ஒகேனக்கல்லில்..

கடந்த 8-ம் தேதி ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்தது. சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து வந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 9,500 கனஅடியாக சரிந்தது.

பரிசல் இயக்கத்துக்கான தடை யும், அருவியில் குளிப்பதற்கான தடையும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x