Published : 16 Aug 2015 09:58 AM
Last Updated : 16 Aug 2015 09:58 AM
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த இளைஞர் பலியானார். 5 பேர் கவலைக் கிடமான நிலையில் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
தலைஞாயிறில் இறுதிச் சடங் கில் கலந்துகொள்ள உறவினர் களும், நண்பர்களும் திரண்டிருந் தனர். அவர்களில் சிலர் மதுகுடிக்க விருப்பப்பட்டு, அரசு மதுபானக் கடைக்கு சென்றனர். ஆனால், சுதந்திர தினம் என்பதால் நேற்று கடை மூடப்பட்டிருந்தது. இதைய டுத்து, அப்பகுதியில் ஓரிடத்தில் கள்ளச்சாராயம் விற்பதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றுள் ளனர். அங்கு விற்கப்பட்ட கள்ளச் சாராயம் மற்றும் மது கஷாயத்தை வாங்கி, இரண்டையும் ஒன்றாக கலந்து குடித்துள்ளனர். அதை குடித்த சில நிமிடங்களில் தலை ஞாயிறு நாயுடு தெருவைச் சேர்ந்த சிங்காரவேலு மகன் நரேந் திரன்(19) என்பவர் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார்.
மேலும் அஜீத்குமார்(20), பால முருகன்(21), மணிகண்டன்(27), சரவணன்(30), மாரிமுத்து(50) ஆகிய 5 பேரும் மயங்கி விழுந் தனர். உடனடியாக அவர்கள் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த மணிகண்டன், சரவணன், மாரிமுத்து ஆகிய மூவரையும் தஞ்சாவூர் அரசு மருத்துவ மனையிலும் அஜீத்குமார், பால முருகன் நாகை மருத்துவமனை யிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT