Published : 12 Nov 2019 09:43 AM
Last Updated : 12 Nov 2019 09:43 AM

நிலவில் ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் உண்டு: விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தகவல்

நாகர்கோவில்

பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை நாகர்கோவி லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவை உலக அரங்கில் முதன்மை நாடாக முன்னிறுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டதுதான் பிரம் மோஸ் ஏவுகணை. அமெரிக்க தயாரிப்பு ஏவுகணைகளை விட அதிக சக்தி உடையதாக இருக்க வேண்டும் என்பதற்காக, ரஷ்யாவு டன் கூட்டு சேர்ந்து பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது.

சந்திரயான், மங்கள்யான் ஆகிய செயற்கைக்கோள்கள் சிறப்பாக செயல்பட்டு தகவல்களை அனுப்பி வருகின்றன. நிலவில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப் பட்டவற்றில் 48 செயற்கைக்கோள் கள் தோல்வியடைந்து உள்ளன.

எந்த நாடாக இருந்தாலும் முதல் முயற்சியில் வெற்றி அடைய வேண்டுமென்பது இல்லை. நிலவில் ஆய்வு செய்வதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவிடம் உள்ளன. நிலவில் உள்ள ஹீலியம் தாதுவை எடுப்பதற்கான தொழிற்சாலையை 2020-ம் ஆண்டு தொடங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான இடைவெளி உள்ளது. இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், விண்வெளி ஆராய்ச்சியில் உலகளவில் 4-வது இடத்தில் உள்ளது. எந்த நாடு விண் வெளி ஆராய்ச்சியில் முன் நிலை யில் இருக்கிறதோ, அந்த நாட்டுடன் கூட்டு சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x