Published : 12 Nov 2019 09:22 AM
Last Updated : 12 Nov 2019 09:22 AM

திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திடீர் மாயம்

கோப்புப்படம்

பல்லாவரம்

மீனம்பாக்கம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் குணசேக ரன்(65). இவரது மகன் சுகுமாறன் (34). இவர் சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருவல் லிக்கேணியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகள் அன்ன பூரணி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பல்லாவரம் சிவந்தி ஆதித்த னார் மண்டபத்தில் நேற்று திரு மணம் நடக்க இருந்தது.

நேற்று முன்தினம் மாலைசுமார் 6.30 மணிக்கு பழவந்தாங் கல் கல்லூரி சாலையில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை சீரமைத்து விட்டு வெளியே வந்தார்.

பின்னர், திருமண மண்டபத்துக்குச் செல்லவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சுகுமாறன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டு இருந்தது.

இதனால், பதற்றம் அடைந்தசுகுமாறனின் தந்தை குணசேகரன் பழவந்தாங்கல் போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணம் பிடிக்கா மல் மணமகன் சென்று விட்டாரா அல்லது வேறு பெண்ணை காதலித்து வந்ததால் சென்று விட்டாரா, கடத்தப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து நேற்று மற்றும்நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதற் கிடையே, மணமகள் தரப்பில் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதில் உரியஇழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x