Published : 12 Nov 2019 07:02 AM
Last Updated : 12 Nov 2019 07:02 AM

விருதுநகரில் தொழில் நஷ்டத்தால் மனைவி, மகனுடன் வியாபாரி தற்கொலை

விருதுநகர்

விருதுநகரில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனைவி, மகனுடன் வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர் இன்பமூர்த்தி (67). மல்லி மொத்த வியாபாரி. அருப்புக்கோட்டை சாலையில் பெரிய வள்ளிக்குளம் அருகே மல்லி மில் நடத்தி வந்தார். நேற்று காலை மில்லில் ஓர் அறையில் இன்பமூர்த்தி, அவரது மனைவி திலகவதி (65), மகன் கண்ணன் (40) ஆகியோர் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தனர்.

காலையில் மில்லுக்குச் சென்ற துப்புரவுப் பணியாளர்கள், மூவரும் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து சூலக்கரை போலீஸாருக்கு தக வல் தெரிவித்தனர்.

போலீஸார் வந்து பார்த்தபோது இன்பமூர்த்தியும் கண்ணனும் உயிரிழந்தது தெரியவந்தது. திலகவதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியி லேயே உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:

இன்பமூர்த்தி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மல்லி மொத்த வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. குஜராத்தில் மல்லி வாங்கியது தொடர்பாக ரூ.40 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. மேலும், இவரது மகன் கண்ணன் மீது குஜராத்தில் உள்ள மொத்த வியாபாரி ஒருவர் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கு விசாரணைக்காக அடிக்கடி குஜராத் சென்றுவர முடியாமல் இன்பமூர்த்தியும் அவரது மகன் கண்ணனும் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும், விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவரால் பல லட்சம் ரூபாய் தராமல் ஏமாற்றப்பட்டதால் வேதனையில் இருந்தனர்.

நேற்று அதிகாலை வீட்டிலி ருந்து இன்பமூர்த்தி, அவரது மனைவி திலகவதி, மகன் கண் ணன் ஆகியோர் நடந்தே மில்லுக்கு சென்றனர்.

அங்கு, குளிர்பானம் மற்றும் டீயில் பூச்சி மருந்தைக் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

உயிரிழந்த கண்ணனுக்கு காயத்ரி (32) என்ற மனைவியும் தனுஷா (6) என்ற மகனும் உள் ளனர். காயத்ரி தனது மகளுடன் சென்னை சென்றதால் அவர்கள் இருவரும் உயிர் தப்பினர், என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x