Published : 10 Nov 2019 08:02 AM
Last Updated : 10 Nov 2019 08:02 AM

தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் 4,500 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தஞ்சாவூர்

தமிழகத்தில் உள்ள அரசு மருத் துவமனைகளில் மருத்துவ பணி யாளர்கள் தேர்வு வாரியம் வாயி லாக 4,500 மருத்துவ பணியிடங் கள் இம்மாத இறுதிக்குள் நிரப் பப்படும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரி வித்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற் றும் அவசர சிகிச்சைப் பிரிவு, அம்மா காப்பீடு திட்டத்தின்கீழ் முட நீக்கியல் துறை சார்பில் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, ரூ.150 கோடி மதிப்பில் கட்டப் பட்ட பன்நோக்கு சிறப்பு மருத்துவ மனையில் அதிநவீன ஐந்து அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன இதய அறுவை சிகிச்சை, உட லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். விபத்துக்கான சிறப்பு சிகிச்சை மையம் புன ரமைக்கப்பட்டு உள்ளது. மூட்டு மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் நவீனப்படுத்தப் பட்டு உள்ளது.

இரு மடங்கு ஊதியம்

அரசு மருத்துவர்களின் கோரிக் கையை அரசு கனிவுடன் பரி சீலனை செய்யும். மருத்துவப் பணி யாளர் தேர்வு வாரியம் வாயி லாக தேர்வு செய்யப்பட்ட 9,533 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய் யப்பட்டனர். ஊதியத்தை உயர்த்து மாறு அவர்கள் விடுத்த கோரிக் கையை ஏற்று, இரண்டு மடங்காக ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது.

நவம்பர் இறுதிக்குள் 2,345 செவிலியர்கள், 1,234 கிராமப் புற செவிலியர்கள், 90 பிஸியோ தெரபிஸ்ட்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 4,500 பணியிடங்கள் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x