Published : 09 Nov 2019 05:42 PM
Last Updated : 09 Nov 2019 05:42 PM
சென்னை
அயோத்தி தீர்ப்பு அனைத்து மதத்தினராலும் அனைவராலும் வரவேற்கக்கூடிய ஒரு தீர்ப்பாக இருக்கிறது என தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கு தீர்ப்பு அனைத்து மதத்தினராலும் அனைவராலும் வரவேற்கக்கூடிய ஒரு தீர்ப்பாக இருக்கிறது. எனவே இந்தத் தீர்ப்பை நாம் அனைவரும் மத நல்லிணக்கத்தை மனதில் கொண்டு வரவேற்போம்.
பொதுமக்களுக்கும், பொது உடைமைகளுக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்தத் தீர்ப்பை நாம் மதிப்போம், வரவேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT