Last Updated : 09 Nov, 2019 05:25 PM

 

Published : 09 Nov 2019 05:25 PM
Last Updated : 09 Nov 2019 05:25 PM

தூண்கள், சிற்பங்கள் தயார்; அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்: ஹெச்.ராஜா பேட்டி

காரைக்குடி

‘சிற்பங்கள் தயாராக இருப்பதால் அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்,’ என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கு முடிவுக்கு வந்திருப்பது திருப்தி அளிக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்.

இந்த தீர்ப்பின் மூலம் இந்திய அரசியல் அமைப்பு சட்டமே வெற்றி பெற்றுள்ளது.

ராம ஜென்ம பூமிக்காக போராட்டங்கள் நடத்தி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன். தூண்கள், சிற்பங்கள் தயாராக இருப்பதால் அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று கூறினார்.

முன்னதாக இன்று காலை, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் அதேசமயம், அயோத்தியில் முஸ்லிம் சமூகத்தினர் கேட்கும், சரியான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச அரசு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x