Published : 09 Nov 2019 07:54 AM
Last Updated : 09 Nov 2019 07:54 AM

அரசுப் பேருந்தை நிறுத்தி டிக் டாக் வீடியோ எடுத்த இளைஞர் கைது

பேருந்தை மறித்து டிக்-டாக் வீடியோ பதிவிட்ட அஜித்குமார்.

விருத்தாசலம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ் ஆதனூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (19). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் சென்று கொண் டிருந்தார். அப்போது திட்டக்குடியில் இருந்து மங்களூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று கீழ் ஆதனூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு புறப்படத் தயாரானது. உடனே அஜித்குமார் பேருந்து முன் சென்று, தனது பைக்கை நிறுத்தி, அதன் மீது படுத்தவாறு திரைப்பட பாடலுக்கேற்ற வகையில் உடல் அசைவு செய்து, டிக்-டாக் செயலி மூலம் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் பலருக்கும் பகிர்ந்துள்ளார். இவரது செயல் சமூக வலைதளங்களில் வைர லாக பரவியது.இதைத் தொடர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் அளித்தப் புகாரின் பேரில், பொதுப் பயன்பாட்டுக்கான வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்த ராமநத்தம் போலீஸார், அஜித்குமாரை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x