Published : 07 Nov 2019 12:37 PM
Last Updated : 07 Nov 2019 12:37 PM

வரும் 24-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது

சென்னை

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக முதல்வரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (நவ.7) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x