Published : 06 Nov 2019 10:35 AM
Last Updated : 06 Nov 2019 10:35 AM

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பழைய ஆயக்கட்டு பகுதிக்கு வைகையில் தண்ணீர் திறக்காததால் விவசாயம் கேள்விக்குறி: புதிய நீர் பங்கீட்டுக் கொள்கை உருவாக்கப்படுமா?

கோப்புப் படம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை

வைகை அணையிலிருந்து சிவ கங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக் காததால் இந்த ஆண்டு விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது. பழைய ஆயக்கட்டுப் பகுதிகளைப் பாதுகாக்க புதிய நீர் பங்கீட்டு கொள்கையை உருவாக்க வேண் டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைகை அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட் டங்கள் பயன்பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பகுதிகளில் 374 கண்மாய்கள் மூலம் 1.36 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றன. பெரியாறு அணை கட்டிய பின்பும், பெரியாறு, வைகை நீர் ஒருங்கிணைந்து பழைய ஆயக்கட்டுப் பகுதிகளை வளம்கொழிக்கச் செய்தன.

பல ஆண்டுகள் கழித்து ஏற் கெனவே வைகை ஆயக்கட்டுப் பகுதியில் இருந்த கம்பம் பள் ளத்தாக்கு, வடக்கு, தெற்கு கால்வாய் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து முல்லை பெரியாறு பாசன பகுதி உருவாக்கப்பட்டது.

பெரியாறு நீரைச் சேமித்துப் பாசனப் பகுதிகளுக்கு வழங் கத்தான், வைகை அணை கட் டப்பட்டது. அந்த அணையில் பெரி யாறு, வைகை நீருக்கு தனித்தனி கணக்கீடு உள்ளது. வைகை அணை கட்டும்போதே பழைய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு வழங் கிய தண்ணீர் அளவு குறையாது என அரசு உத்தரவாதம் அளித்தது.

பிற்காலத்தில் வைகையின் துணை ஆறுகளான வைரவனாறு, சுருளியாறு, முல்லையாறு, வரட் டலாறு, சுத்தகங்கை, கொட் டகுடியாறு, கல்லாறு, பாம்பாறு, குடமுருட்டியாறு, தேனியாறு, வராகநதி, மஞ்சளாறு, மருதாநதி ஆகிய சிற்றாறுகளின் குறுக்கே ஆங்காங்கே அணைகள் கட் டப்பட்டன. இதனால் வைகை நதிக் கான நீரின் அளவு குறைந்தது.

மதுரை, சிவகங்கை, ராமநா தபுரம் மாவட்ட மக்களுக்கு கொடுத்த உத்தரவாதமும் காற்றில் பறக்கவிடப்பட்டது. இதனால் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு உரிய நீர் பங்கீடு வழங்காமல் ஏமாற்றி வருவதாக ஒவ்வொரு ஆண்டும் புகார் எழுகிறது.

இந்த ஆண்டு வைகை அணை யில் திருப்திகரமாக தண்ணீர் இருந்தும் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்காததால் சிவகங்கை, ராம நாதபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட வைகைப் பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறிய தாவது: 125 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய பெரியாறு பாசனப் பகுதியில் இருபோக சாகுபடியும், பெரியாறு விரிவாக்கப் பகுதிகளில் ஒருபோக சாகுபடியும் நடந்து வந்தது. ஆனால் வைகை ஆற்றில் முறையாக தண்ணீர் திறக்காததால் சங்க காலத்தில் இருந்தே பயனடைந்த பழைய ஆயக்கட்டு விவசாய நிலங்கள் தரிசாக விடப்பட்டன.

வைகை அணையில் வைகை, பெரியாறு நீர் தனித்தனியாக கணக் கிடப்படுகிறது. இந்த நடைமுறை வேறு எங்கும் இல்லை. இதை மாற்றி ஒரே நதி நீர்; சமநீர் பங்கீடு என்ற முறையைக் கொண்டுவர வேண்டும். பழைய ஆயக்கட்டு விவசாயப் பகுதிகளைப் பாதுகாக்க புதிய நீர் பங்கீட்டுக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

மேலும் சிவகங்கை மாவட் டத்தில் விரகனூர் மதகு அணையில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை நதி பழைய ஆயக்கட்டு 2-ம் பகுதியில் 40,743 ஏக்கர் நிலங்கள் பயன் பெற்று வந்தன.

இதுவரை வைகையில் தண் ணீர் திறக்காததால் அப்பகு தியில் விவசாயம் செய்ய முடி யாதநிலை உள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பதால் வைகை ஆற்றில் நீர் திறந்தால் தண்ணீர் இழப்பு குறைவாகவே இருக்கும், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x