Published : 05 Nov 2019 01:00 PM
Last Updated : 05 Nov 2019 01:00 PM
சென்னை
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ.5) செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆலங்குடியில் 2 செ.மீ., பேராவூரணி, அரிமலம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் நவ.5-ம் தேதி அந்தமான் கடல் பகுதிகள், மத்தியக் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் நவ.6, 7 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திர கடற்பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் இயல்பு மழை அளவு 22 செ.மீ. இந்த காலகட்டத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 8% அதிகமாகும்.
வரும் 2-3 தினங்களுக்கு குறிப்பிடத்தகுந்த மழை இருக்காது".
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT