Published : 05 Nov 2019 11:04 AM
Last Updated : 05 Nov 2019 11:04 AM

பாப்ஸ்கோ நிறுவனத்தை மூட புதுச்சேரி அரசு முடிவு?

மூடப்பட்டுள்ள பாப்ஸ்கோ கடைகளில் ஒன்று. (கோப்பு படம்)

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி 

பாப்ஸ்கோ நிறுவனத்தை மூட அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடந்து முடிவுகள் தரப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் காங்கிரஸ் அரசு எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரியில் 1992-ம் ஆண்டு பாப்ஸ்கோ நிறுவனம் தொடங் கப்பட்டது. தொடக்கத்தில் மூன்று ரேஷன் கடைகள் நடந்தன. பின்னர் 96-ல் மானியக்கழகமாக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து காய்கறி அங்காடிகள், மெடிக்கல், பெட்ரோல் பங்குகள், மதுபானம் விற்பனை உள்ளிட்டவற்றை பாப்ஸ்கோ தொடங்கியது. இதற்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.

ஆனால் நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்து தர தொடங்கப்பட்ட மெடிக்கல் ஷாப்புகள் 2003-ல் திறக்கப்பட்டு தற்போது அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதேபோல் பாப்ஸ்கோ காய்கறி அங்காடிகள் வரவேற்பு பெற்ற பிறகு மூடப்பட்டுவிட்டன.

புதுச்சேரியில் அரியாங்குப்பம், அரும்பார்த்தபுரம், கன்னியக் கோயில், அரியூர், கரையாம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் பெட்ரோல் பங்குகள் இருந்தன. இந்த பங்குகளில் பணிபுரிவோருக்கு ஐஓசியே மாத ஊதியம் தந்தது. அதே நேரத்தில் பங்கு வருவாய் பாப்ஸ்கோவுக்கு கிடைத்தது. தற்போது பெட்ரோல் பங்கும் நஷ்டம் என செயல்படவில்லை.

கோரிமேட்டில் இன்டேன் காஸ் நிறுவனத்தின் பாப்ஸ்கோ ஏஜென்சி லாபத்துடன் இயங்கியது. பாப்ஸ்கோ வருமானத்தை உயர்த்த கடந்த 2009-ல் மதுபான விற்பனை தொடங்கப்பட்டது. 30 மதுபான கடைகள் இருந்தன. ஆனால் அனைத்தும் நஷ்டம் என்பதுதான் விநோதம்.

இதுதொடர்பாக பாப்ஸ்கோ வட்டாரங்களில் விசாரித்த போது, “பாப்ஸ்கோ தொடங்கப் பட்டபோது 23 பேர் மட்டுமே பணிபுரிந்தனர்.

2003-ல் 200 பேர் வரை பணிபுரியத் தொடங்கினர். தொடர்ந்து ஆட்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த 2009-ல் 310 நிரந்தர ஊழியர்கள், 546 பேர் தினக்கூலி ஊழியர்கள், 700-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதற்கு வாரிய தலைவர்களாக அரசியல்வாதிகள் இருந்தனர். பாப்ஸ்கோ அதிகாரிகளும் பணியில் இருந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊதியம் தருவதில் பிரச் சினை ஏற்பட்டது. கடந்த என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த முறைகேடுகள்தான் சரிவுக்கு முக்கியக் காரணம் என குற்றம் சாட்டிய காங்கிரஸ் அரசு, விசாரணை கமிஷன் அமைத்தது. ஆனால் முடிவுகள் கிடைத்தும் ஏன் இதுவரை அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை? தற்போது 1,100 பேர் பணியில் இருக்கின்றனர். 27 மாதங்களாக அவர்கள் ஊதியம் பெறவில்லை” என்றனர்.

எந்தப் பிரிவும் செயல்படவில்லை

கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் பாப்ஸ்கோவில் எந்தப் பிரிவும் செயல்படவில்லை. மருத்துவமனைகளுக்கான காய்கறி விநியோகம் தொடங்கி தீபாவளி பஜார் வரை ஏதும் நடைமுறையில் இல்லை.

இச்சூழலில் தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் விசாரித்த போது, “அரசு பாப்ஸ்கோ நிறு வனத்தை மூட முடிவு எடுத்து ள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னரே அடுத்த கட்டமாக முடிவு எடுப்போம்” என்று குறிப்பிடுகின்றனர்.

அரசு உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “கடும் நஷ்டத்தால் மூடும் முடிவு பரிசீலிக் கப்படுகிறது” என்று உறுதி செய்கின் றனர். பாப்ஸ்கோ தலைவர் தனவேலு எம்எல்ஏவிடம் தொழிலா ளர்கள் முறையிட்டுள்ளனர். அரசின் முடிவுக்கு பிறகே எதையும் தெரிவிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x