Published : 03 Nov 2019 08:30 AM
Last Updated : 03 Nov 2019 08:30 AM

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளராக மாவட்ட நீதிபதியை நியமிக்க தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளராக மாவட்ட நீதிபதியை நியமிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பதிவாளராக உயர் நீதிமன்ற உதவி பதி வாளர் அல்லது சார்பு நீதிபதியை நியமிக்க விதிகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டன. இந்நிலையில் இந்தப் பதவிக்கு மாவட்ட நீதி பதியை நியமிக்கும் வகையில் கடந்த 2015-ல் நியமன விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் முன்னாள் தலைவரான சுப்பு ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கலந்து ஆலோசிக்காமல், நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர் நியமன விதிகளில் திருத்தம் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

நிர்வாகரீதியிலான பதிவாளர் பணிக்கு மாவட்ட நீதிபதியாக பணியாற்றுபவரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே இதுதொடர்பாக கடந்த 2015-ல் பிறப்பிக்கப்பட்ட அரசா ணையை ரத்து செய்ய வேண்டும். மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பதிவாளராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் முன்னாள் தலைவரை நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங் கிய அமர்வு, “இதுதொடர்பாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் பதி லளிக்க வேண்டும்” என உத்தர விட்டு, விசாரணையை வரும் நவ.6-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x