Published : 02 Nov 2019 08:20 PM
Last Updated : 02 Nov 2019 08:20 PM
புதுச்சேரி, பிடிஐ
புதுச்சேரியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன் விஷக்குளவி கொட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 71. மனைவி, ஒரு மகன் மற்ரும் 5 மகள்கள் இவருக்கு உள்ளனர்.
புருஷோத்தமனுக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ராதாபுரம் கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது . அங்கு புதர்களை அவர் அகற்றிக் கொண்டிருந்த போது விஷக்குளவி கொட்டியது.
இதனையடுத்து முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளிப் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக இருந்தார். மணவெளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT