Published : 02 Nov 2019 04:05 PM
Last Updated : 02 Nov 2019 04:05 PM

மீட்பு நடவடிக்கைக்காக தூத்துக்குடி எம்.பி. கனிமொழிக்கு மீனவர்கள் நன்றி

தூத்துக்குடி

நடுக்கடலில் தத்தளித்த 38 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டதற்காக தூத்துக்குடி எம்.பி. கனிமொழிக்கு மீனவர்கள் பிரதிநிதிகள் இன்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்திலிருந்து கடந்த மாதம் 13-ம் தேதி ஒரு விசைபடகில் 10 பேர், 16-ம் தேதி 2 விசைபடகுகளில் 18 பேர் , 23-ம் தேதி ஒரு விசைபடகில் 10 பேர் என மொத்தம் 38 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

அவர்கள் நீண்ட நாள் தங்கி மீன் பிடிப்பது வழக்கம். புயல் உருவாகியுள்ளதால் கடலுக்குச் சென்ற அனைத்து மீனவர்களும் கரை திரும்ப வேண்டுமென அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்படி 38 மீனவர்களையும் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக தெரிய வந்தது.

உடனே தருவைக்குளத்தை சேர்ந்த மீனவர்கள், 38 மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென தூத்துக்குடி ஆட்சியர் சந்திப்நந்தூரி மற்றும் தூத்துக்குடி தொகுதி எம்பி., ஆகியோரிடம் மனு அளித்தனர்.

கனிமொழியும், தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து காணாமல்போன மீனவர்களின் உறவினர்களை தருவைக்குளத்தில் நேரில் சந்தித்துத் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்திடம், கனிமொழி எம்.பி., பேசியதைத் தொடர்ந்து 38 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதற்காக கனிமொழி எம்.பி.யை சந்தித்த மீனவர்களின் உறவினர்கள் மீட்பு நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, "உள்துறை அமைச்சகத்திடம் மீனவர்களை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். அவர்களும் கடலோர காவற்படையினருடன் இணைந்து மீட்புப் பணியை முடுக்கிவிட்டனர். மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மேலும் பேசும்போது, தூத்துக்குடியில் பலபகுதிகளில் நீர்வழித் தடங்களை தூர்வாரும் பலகை மட்டுமே உள்ளதாகவும் தூர்வாராததால் மழை நீர் வீணாவதாகவும் குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x