Published : 02 Nov 2019 08:09 AM
Last Updated : 02 Nov 2019 08:09 AM

‘பிகில்' சிறப்பு காட்சியின்போது வன்முறை; விஜய் ரசிகர்கள் மேலும் 18 பேர் கைது

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரியில், பிகில் திரைப்பட சிறப்பு காட்சி வெளியாக தாமதம் ஆனதால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஏற்கெனவே 32 விஜய் ரசிகர்கள் கைது செய்யப் பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளியை முன் னிட்டு கடந்த 25-ம் தேதி கிருஷ்ண கிரி நகரில் 4 திரையரங்குகளில் வெளியானது. அன்றைய தினம் நள்ளிரவு 1 மணியளவில் சென்னை சாலையில் உள்ள ஒரு திரையரங் கில் சிறப்பு காட்சி திரையிடக்கோரி ரசிகர்கள், தியேட்டர் ஊழியர்களி டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஏற்பட்ட பிரச்சினை, வன்முறையாக மாறியது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் திரண்ட விஜய் ரசிகர்கள் போக்குவரத்து சிக்னல், தடுப்பு கம்பிகள், ஒலிபெருக்கிகள், தீபாவளி விற்பனைக்காக சாலை யோர வியாபாரிகள் வைத்திருந்த பொருட்களை உடைத்து சேதப் படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 32 ரசிகர்களை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதி வான காட்சிகளை கொண்டு, வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர் களை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று வன் முறை வழக்கில் தொடர்புடைய, கிருஷ்ணகிரி எம்ஜிஆர் நகர் முத்தமிழ் (20), நவீன்குமார் (19), பூபதி, பிரகாஷ், ஆனந்த் நகர் கிருஷ் ணமூர்த்தி, பிரபாகர், சிவபாரத், வெங்கடேஷ், பிரசாந்த் உட்பட 18 பேரை கைது செய்தனர்.

வன்முறை தொடர்பாக ஏற் கெனவே 32 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலை யில், தற்போது மேலும் 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்டதாக இது வரை விஜய் ரசிகர்கள் 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x