Published : 01 Nov 2019 03:30 PM
Last Updated : 01 Nov 2019 03:30 PM

பணநாயகத்தை நம்பி அதிமுக பெற்ற வெற்றி தொடர வாய்ப்பே இல்லை: ஸ்டாலின்

திருமண விழாவில் பேசும் ஸ்டாலின்

சென்னை

பணநாயகத்தை நம்பி அதிமுக பெற்ற வெற்றி தொடர வாய்ப்பே இல்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.1), கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:

"கடந்த மக்களவைத் தேர்தலில் குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை காட்டுவது போல், மக்களை ஏமாற்றி ஓட்டுகளை திமுக பெற்றதாக, முதல்வர் விமர்சித்திருந்தார். அதைவிடக் கேவலமாக, "பொதுமக்களுக்கு, வாக்காளர்களுக்கு மிட்டாய் கொடுத்து எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது" என்று சொல்கிறார்கள்.

மக்களவை தேர்தலில் மக்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி விட்டது என்று கூறியவர்களை இப்போது நான் கேட்கிறேன்.

இப்போது இரண்டு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றிருக்கிறது. அதிமுக என்ன கொடுத்தார்கள்?அல்வா கொடுத்தார்களா? இதுதான் என்னுடைய கேள்வி.

இப்போது நான் அதையே திருப்பிச் சொல்லிட முடியாதா?

பொய் சொல்லி இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அது அல்ல உண்மை!

பணம் கொடுத்து - பணநாயகத்தின் மூலமாக இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அது தொடர்ந்து நீடிக்க வாய்ப்பே கிடையாது!

எனவே, வரவிருக்கும் தேர்தலில் திமுக ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற, அனைவரும் சிறப்பான ஆதரவை வழங்கிட வேண்டும்," இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x