ஒருவாரமாக நீடித்த அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள்
Updated on
1 min read

சென்னை

கடந்த ஒரு வார காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை நிரப்புதல், பட்ட மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு, பட்ட மேற்படிப்பு அரசு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த அக்.25 ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப இன்று (நவ.1) காலை வரை அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமியும், மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று காலையில் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in