Published : 01 Nov 2019 08:51 AM
Last Updated : 01 Nov 2019 08:51 AM

நீட் ஆள்மாறாட்டம் மாணவிக்கு ஜாமீன்: தாய் மனு தள்ளுபடி

மதுரை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவிக்கு உயர் நீதி மன்றம் ஜாமீன் வழங்கி உத்தர விட்டது. அதேநேரம், மாணவி யின் தாயாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தருமபுரி மாணவி பிரியங்கா, இவரது தாயார் மைனாவதி ஆகியோரை நீட் ஆள்மாறாட்ட வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

பிரியங்கா தனது மனுவில், ‘நீட் தேர்வு ஆள்மாற்ற வழக்கின் விசாரணையின் பெரும்பகுதி முடிவடைந்துள்ளது. என் தாயார் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு தொடர் சிகிச்சை பெற்று வருகி றார். இதனால் எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என கோரி இருந்தார்.

மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "பிரியங்கா வுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவரது தாயார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என போலீ ஸார் கூறினர். எனவே, அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் படுகிறது" என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x