Published : 31 Oct 2019 10:51 AM
Last Updated : 31 Oct 2019 10:51 AM

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை: சுரேஷுக்கு மீண்டும் 7 நாட்கள் போலீஸ் காவல்

திருச்சி

பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை தொடர்பாக சுரேஷிடம் மீண்டும் 7 நாட்கள் காவலில் விசாரிக்க கொள்ளிடம் போலீ ஸாருக்கு ஸ்ரீரங்கம் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

திருச்சி சமயபுரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரை மர்ம நபர்கள் கடந்த ஜன.26, 27-ம் தேதிகளில் துளையிட்டு, லாக்கர் களை உடைத்து 470 பவுன் நகை கள், ரூ.19 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர்.

4 தனிப்படை போலீஸார் 9 மாதங்கள் விசாரித்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் காமாட்சி புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ் ணன்(28) என்பவர் வத்தலகுண்டு அருகே கடந்த 14-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

பிரபல கொள்ளையன் முருகன், அவரது சகோதரி மகன் சுரேஷ், தனது உறவினரான வாடிப்பட்டி தெத்தூரைச் சேர்ந்த கணேசன் ஆகியோருடன் சேர்ந்து இக் கொள்ளையில் ஈடுபட்டதாக ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையடுத்து, கணேசனிடம் முதலில் 7 நாட்களும், பிறகு 6 நாட்களும் காவலில் எடுத்து கொள் ளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதேபோல, சுரேஷிடம் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

எனினும், இவரிடம் தொடர்ந்து விசாரிக்க வேண்டியிருந்ததால் மேலும் 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு கொள் ளிடம் போலீஸார் ஸ்ரீரங்கம் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதை ஏற்றுக்கொண்டு சுரேஷிடம் மீண்டும் 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி சிவகாமசுந்தரி நேற்று உத்தர விட்டார். இதையடுத்து சுரேஷை ரக சிய இடத்துக்கு அழைத்துச் சென்று கொள்ளிடம் போலீஸாரும், தனிப்படை போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை வழக்கில் இதுவரை ராதாகிருஷ்ணனிடம் இருந்து 13 பவுன் தங்க நகைகள், சுரேஷ் மற் றும் கணேசனிடம் இருந்து 2 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்வதற்காக தொடர்ந்து விசாரித்து வருகிறோம். கர்நாடகா போலீஸின் விசாரணை யில் உள்ள முருகனை திருச்சி மாநகர போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை வழக்கில் விசாரிக்க உள்ளோம். லலிதா ஜூவல்லரியில் கொள்ளை யடித்த 1.5 கிலோ நகை கணேசனி டம் மீட்கப்பட்டன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x