Published : 28 Oct 2019 11:48 AM
Last Updated : 28 Oct 2019 11:48 AM

முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி: 30-ம் தேதி நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

சென்னை

மறைந்த தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், 30-ம் தேதி காலை 9 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் மலரஞ்சலி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘மறைந்த தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், 30-ம் தேதி காலை 9 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் மலரஞ்சலி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x