Published : 25 Oct 2019 11:11 AM
Last Updated : 25 Oct 2019 11:11 AM
சென்னை
மாமல்லபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய – சீன உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (அக்.25) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய – சீன உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், சீன குடியரசுத் தலைவரின் வருகையின் போது செய்யப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள், அன்பான உபசரிப்பு ஆகியவை நமது கலாச்சாரத்தையும், மரபையும் ஒருசேர பிரதிபலித்தது என்றும், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய – சீன உச்சிமாநாடு தனக்கும், சீன நாட்டு குடியரசுத் தலைவருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது என்றும், உச்சி மாநாட்டுக்கும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்தமைக்கு தமிழ்நாட்டு பொதுமக்களுக்கும், கலாச்சார, சமூக, அரசியல் அமைப்புகளுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் தன்னுடைய பாராட்டுதல்களை பிரதமர் தெரிவித்துள்ளார்," என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT