Published : 25 Oct 2019 10:22 AM
Last Updated : 25 Oct 2019 10:22 AM

நகை வியாபாரியிடம் கொள்ளையடிக்க முயன்ற கும்பல்: போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்

சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். நகைக் கடைகளுக்கு ஆர்டரின் பேரில் தங்க நகைகள் செய்து கொடுத்து வருகிறார். இவரது நண்பர் மன்னன். இவரும் தங்க நகைகள் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலையில் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு சவுகார்பேட்டையில் உள்ள நகை கடைகளுக்கு கொடுப்பதற்காக சந்தோஷ் வந்தார்.

இதை அறிந்திருந்த மன்னன், கொள்ளை கும்பல் ஒன்றை ஏற்பாடு செய்து நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார். அதன்படி. நேற்று காலை சந்தோஷின் வருகைக்காக கொள்ளைக் கும்பல் காத்திருந்தது. ரகசிய தகவலின்பேரில் யானைக்கவுனி போலீஸார் கண்காணித்து சவுகார்பேட்டையில் காத்திருந்த கொள்ளைக் கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(20), வினோத்(29), நவீன்(26), பவன்(26), ஆஷிக்(28), கோபி(25) என்பது தெரியவந்தது. கொள்ளைக்கு திட்டம் போட்டுக் கொடுத்த மன்னன்(28) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x