Published : 24 Oct 2019 10:42 AM
Last Updated : 24 Oct 2019 10:42 AM
திருச்சி
திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிச்சாண்டார்கோவில் கிளையில் கடந்த ஜன.26, 27 நாட்களில் மர்ம நபர்கள் வங்கியின் சுவரை துளையிட்டு 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக 9 மாதங்களுக்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்டம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன்(28) என்பவரை வத்தல குண்டு அருகே கடந்த 14-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் பிரபல கொள்ளையன் முருகன், அவரது சகோதரி மகன் சுரேஷ், தனது உறவினரான கணேசன் ஆகியோருடன் சேர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த கணேசனை 7 நாட்கள் காவ லில் எடுத்து கொள்ளிடம் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
சுரேஷையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீரங் கம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சிவகாமசுந்தரி, சுரேஷை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து, சுரேஷிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT