Published : 24 Oct 2019 10:42 AM
Last Updated : 24 Oct 2019 10:42 AM

வங்கி கொள்ளை வழக்கில் கொள்ளையன் சுரேஷுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்

திருச்சி

திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிச்சாண்டார்கோவில் கிளையில் கடந்த ஜன.26, 27 நாட்களில் மர்ம நபர்கள் வங்கியின் சுவரை துளையிட்டு 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக 9 மாதங்களுக்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்டம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன்(28) என்பவரை வத்தல குண்டு அருகே கடந்த 14-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் பிரபல கொள்ளையன் முருகன், அவரது சகோதரி மகன் சுரேஷ், தனது உறவினரான கணேசன் ஆகியோருடன் சேர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த கணேசனை 7 நாட்கள் காவ லில் எடுத்து கொள்ளிடம் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.

சுரேஷையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீரங் கம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சிவகாமசுந்தரி, சுரேஷை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து, சுரேஷிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x