Published : 24 Oct 2019 09:24 AM
Last Updated : 24 Oct 2019 09:24 AM
சென்னை
டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிந்த 8 மாதங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வெற்றிபெற்ற 2,667 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங் கிணைந்த குடிமைப்பணிகள் (குரூப்-2, நேர்முகத் தேர்வு உள்ள பதவிகள்) பதவிகளில், 1,338 காலிப்பணியிடங்களை நிரப்பும் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் 6 லட்சத்து 26,970 பேருக்கு நவம்பர் 11-ம் தேதி முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற 14,797 பேருக்கு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
பொதுவாக முதல்நிலைத் தேர்வு (கொள்குறி வகை) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந் துரைக்கும் வகை) என இரு பகுதிகளாக நடத்தப்படும் தேர்வு களின் முடிவுகளை வெளியிட ஒரு வருடத்துக்கும் மேல் ஆகும். ஆனால் சமீப காலமாக தேர் வாணையத்தின் சீரிய முயற்சியால் தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, குரூப் 2-ல் அடங்கிய பதவிகளுக்கு, முதன் மைத் தேர்வு நடத்தப்பட்ட 8 மாத காலத்துக்குள், தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
எழுத்துத் தேர்வில் விண்ணப்ப தாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கை யில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2,667 விண்ணப்ப தாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன நவம்பர் 6-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான குறிப் பாணை வழக்கம்போல் தேர்வா ணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ் செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப் படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT