Published : 23 Oct 2019 10:53 AM
Last Updated : 23 Oct 2019 10:53 AM
கரூர்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இன்று (அக்.23) தீபாவளி முன்பணமும், நாளை (அக்.24) போனஸூம் வழங்கப்படும் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 8 கோட்டங்களில் பணியாற்றிவரும் 1.36 லட்சம் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்காக முதல்வர் பழனிசாமி ரூ.206.52 கோடி நிதி ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.
அக்.24-ம் தேதி (நாளை) முதல் போனஸ் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.16,800 போனஸாக கிடைக்கும். தீபாவளி பண்டிகைக்கான முன்பணம் ரூ.10 ஆயிரம் அக்.23-ம் தேதி (இன்று) முதல் வழங்கப்படும்.
தீபாவளியை பண்டிகையையொட்டி, வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 21,586 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் விரைவில் 50 ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT