Published : 04 Jul 2015 08:12 AM
Last Updated : 04 Jul 2015 08:12 AM
பொறியியல் கலந்தாய்வில் 3-ம் நாளான நேற்று வரை 9170 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. 3-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு மொத்தம் 5207 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 857 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் கலந்துகொண்ட 4350 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தனர். அவர்கள் அனைவருக்கும் கலந்தாய்வின் நிறைவில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் மொத்தம் 9,170 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் பேராசிரியர் வி.ரைமென்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT